Pages

Friday, November 13, 2009

கணநாதனே வருக

ஓம் எனப் பெரியோர்கள் என்றும்
ஓதுவதாய் வினை மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய்த் துயர்
தீய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்
நாமமும் உருவுமற்றே மனம்
நாடறிதாய்ப் புந்தி தேடறிதாய்
ஆமெனும் பொருளனைத்தாய் வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்
நின்றிடும் பிரமமென்பார் அந்த
நிர்மலப் பொருளினை வணங்கிடுவேன்

0 comments:

Post a Comment